வவுனியாவில் உளவள ஆலோசனை தொழிற்பயிற்சி கருத்தரங்கு!!

786

இளைஞர், யுவதிகளுக்கான உளவள ஆலோசனை தொழிற்பயிற்சி கருத்தரங்கு இன்று (08.10) வவுனியாவில் இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய வடக்கு இணைப்பாளர் ஜெ.ஆர்.வினீத்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

சமூதாய சீர்திருத்த திணைக்களமும், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய வடக்கு பிராந்தியமும் இணைந்து நடாத்திய இத் தொழிற்பயிற்சி கருத்தரங்கில் 75 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.

இச்செயலமர்வில் திறன்களை வளத்துக் கொள்வதற்கான பயிற்சி நெறிகள் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் கைத்தொழில் பயிற்சிகளை வளவாளர்களாக கலந்தகொண்டிருந்த எஸ்.செல்வராஜ் மற்றும் தோமஸ் திலக் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர் எ.சி.அசாருதீன், வவுனியா சிறைச்சாலைகள் நலன்புரி உத்தியோகத்தர் எ.பி.எல்.எலிபிட்டிய, வட மாகாண சிரேஸ்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அனஸ், இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய நிர்வாக உத்தியோகத்தர் கெ.தாவீது, இலங்கை சிறைச்சாலைகள் ஐக்கிய அமைப்பின் தேசிய இயக்குனர் எஸ்.ஜெயராஜா, சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் சுதர்சியா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.