அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!!

272

மும்பையில் இருவேறு இடங்களில் அவமானம் தாங்காமல் அடுத்தடுத்து இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை KD Gaikwad பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் ஜூலி ஷர்மா. இவர் நேற்று பள்ளியிலிருந்து மதியம் வீடு திரும்பும்பொழுது அழுதுகொண்டே வந்துள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர் நடந்தவை பற்றி விவரிக்கும்போது, பள்ளியில் அனைவரின் முன்னிலும் அணில் பால் என்ற ஆசிரியர் திட்டத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து தன்னுடைய அறைக்கு சென்ற சிறுமி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக திரண்ட உறவினர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பேரில் இந்திய தண்டனை சட்டம் 306-ன் படி ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோல 10-ம் வகுப்பு படிக்கும் சலானி என்ற மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வரும் தேர்விற்காக நன்கு படிக்குமாறு அவருடைய தாய் வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே விவாதம் முற்றியுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து ரெண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்திற் ஏற்படுத்தியுள்ளது.