தப்பு செய்துவிட்டேன் : கணவருடன் சேர்த்து வையுங்கள்: குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

289

சென்னையில் குழந்தையை கொன்ற தாய், தான் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை புருஷனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பொலிசாரிடம் கண்ணீர் சிந்தியுள்ளார்.

வெங்கண்ணா – உமா தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த கடந்த 33 நாள்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சார்விக் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், குழந்தையைக் காணவில்லை என்று உமா கூறியதன்பேரில் வெங்கண்ணா, வேளச்சேரி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்,

அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தியதில், குழந்தையை ஏரியில் வீசியதை அந்தப் பகுதியில் உள்ள சிலர் பார்த்துள்ளனர் என்று பொலிசார் உமாவிடம் கேட்டதும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தை காணாமல் போனதிலிருந்து உமா அழாமல் இருந்தார். பொலிசாரின் இந்தக் கேள்வியைக் கேட்டபிறகு அவரின் கண்கள் கலங்கின. அதன்பிறகு அவரே உண்மையை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது அவருக்கு மார்பு வலித்துள்ளது. அதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறிய உமாவுக்கு ஆளாளுக்கு அறிவுரைகள், டிப்ஸ்களைக் கொடுத்துள்ளனர். அதையெல்லாம் அவர் பின்பற்றினாலும் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், குழந்தைக்குப் பால் கொடுப்பதை அவர் நிறுத்தியுள்ளார். பாலுக்காக குழந்தை அழுதபோது வலி காரணமாக அவர் பால் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான் வலிக்கான மாத்திரைகள் அவருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை, வெங்கண்ணா சாப்பிட அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தான் குழந்தையை அருகில் இருந்த ஏரிக்குள் தூக்கி வீசியுள்ளார். உமாவை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திவிட்டு புழல் பெண்கள் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதுவரை அமைதியாக இருந்த உமா, சிறையின் அருகே செல்லும்போது கதறி அழுதுள்ளார்.

சார், தப்பு பண்ணிட்டேன், தயவு செய்து என்னை என் புருஷனோடு சேர்த்துவைத்திடுங்க என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவருக்கு போலீஸார் ஆறுதல் கூறி சிறையில் அடைத்துள்ளனர்.