தாயின் பிரிவை தாங்கமுடியவில்லை : தற்கொலை செய்து கொண்ட இளைஞன் நண்பர்களிடம் சொன்ன வார்த்தை!!

410

தமிழகத்தில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நல்லதம்பி – பாப்பாத்தி. கூலித் தொழில் செய்து வரும் இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சுசிலா மற்றும் கோகிலா என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், சக்திவேல் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாப்பாத்திக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவர் கடந்த ஒரு வருடமாக தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இவரை மகன் சக்திவேல் பத்திரமாக பார்த்து வந்துள்ளார்.

இதையடுத்து 7 மாதங்களுக்கு முன்பு பாப்பாத்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல் இருந்த சக்திவேல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் அவரது தந்தை நல்லதம்பியும் உறவினர்களும் காப்பாற்றினார்கள்.

நேற்று தந்தை நல்லதம்பி கூலி வேலைக்குச் சென்ற பிறகு, சக்திவேல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் யாருக்கும் தெரியாமல் விஷம் வாங்கி வந்து வீட்டுக்குள் அருந்திவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே சக்திவேல் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். பின்னர், அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இறந்த சக்திவேல் அம்மாவின் மரணத்தைத் தாக்கிக்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும், அவரின் நினைவலைகள் தன்னை வாட்டுவதாகவும் நண்பர்களிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.