வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் 8கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

770


வவுனியாவில் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான நேரத்திற்குள் பொலிசாரின் நடவடிக்கையின்போது 8 கிலோ 640 கிராம் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,



நேற்று இரவு 11 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் மறைத்து எடுத்துச் செல்லவிருந்த 4கிலோ 140கிராம் கேரள கஞ்சாவுடன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த முகமட் இர்ஷாட் வயது 22 இளைஞனைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓமந்தை பொலிசாருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் கந்தசாமி பிரசாந்த் என்ற 21 வயது இளைஞனைக் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட இவ்விருவர்களிடமிருந்து 8கிலோ 640கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இவ்விரு இளைஞர்களையும் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.