அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா?

379

அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.