வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடந்த பொங்கல் விழா இன்று (15.06.2013) அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதி வழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன.
இரவு நிகழ்ச்சிகளாக “சுண்ணாகம் ஷ்ருதிலயா” இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி,கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் எமது வவுனியா நெற் இணையத்தளம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
வீடியோ பதிவுகளை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள் http://www.vavuniyanet.com/?page_id=1025