துப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு பேஸ்புக் குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

232

களுத்துறை- தெபுவன பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் சார்ஜன்ட் சனத் குணவர்தன பற்றி அண்மையில் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

தன்னால் கைது செய்யப்பட்ட சட்டவிரோத மண் லொறியை பொலிஸ் பொறுப்பதிகாரி விடுவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துப்பாக்கியுடன் நீதிகோரி போராட்டம் நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு, உதவியற்றவரான சார்ஜன்ட் சனத் குணவர்தனவின் சம்பளத்தை செலுத்த பேஸ்புக் பயனர்கள் குழு சேர்ந்தது. அந்த குழுவால் சார்ஜண்ட் சனத் குணவர்தனவுக்கு வழங்க பணம் சேகரிக்க வங்கி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த கணக்கில் சேகரிக்கப்பட்ட மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை சார்ஜன்ட் வீட்டிற்கு சென்று வழங்குவதற்கு அந்தகுழு நடவடிக்கை எடுத்தது.

பேஸ்புக் பயனாளர் நிமல் எதிரிசிங்க உட்பட்ட குழுவிரே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.