ஸ்ருதியை தாக்கியவர் பரபரப்பு வாக்குமூலம்!!

330

sruthiநடிகை ஸ்ருதி ஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை பல காலமாக பின் தொடர்ந்து வந்த ஒருவர் கடந்த 19ம் திகதி அவரது வீட்டுக் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த ஸ்ருதியை அந்த நபர் கழுத்தை நெறித்துள்ளார்.

அவர் வசம் இருந்து தப்பித்த ஸ்ருதி பின்னர் இந்த சம்பவம் குறித்து பொலிசில் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் குற்றவாளி அசோக் த்ரிமுகே(32) என்பவரை நேற்று அவரை அவரது வீட்டுக்கு அருகே வைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து குற்றவாளி கூறுகையில் என் சகோதரருக்கு வேலை கேட்டுத் தான் அவரது வீட்டுக்கு சென்றேன். நான் பிலிம் சிட்டியில் பணியாற்றி வந்தேன் என்றும் என்னை ஸ்ருதி தவறாக புரிந்து கொண்டார் எனவும் கூறியுள்ளார்.

அசோக்கின் சகோதரி ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.