வவுனியாவில் வானுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

594

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் இன்று (19.10.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக பயணித்த வான் மீது நெல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகே நாற்சந்தியில் சூசைப்பிள்ளையார் குளம் வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தினை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.