காவல் நிலையத்தில் பொலிசாரின் அதிரடி கேள்விகளால் திணறிய ராதா!!

275

Radhaகாவல் நிலையத்தில் நடிகை ராதா பொலிசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் பைசூல் என்பவர் மீது புகார் கொடுத்தார்.

அதில் தன்னோடு திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்திவிட்டு தனது பணம் நகையை ஏமாற்றி கொண்டு சென்றுவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வடபழனி இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று வடபழனி காவல் நிலையத்தில் ஆஜரானா ராதாவிடம் பொலிசார் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடன் அவரது வழக்கறிஞரும் இருந்தார்.

விசாரணையில் பொலிசார் பைசூலுடன், ராதாவுக்கு இருந்த உறவு பற்றி துருவி துருவி கேட்டனர். தாலி கட்டாமலேயே அவருடன் எப்படி 5 ஆண்டுகள் மனைவியாக வாழ சம்மதித்தீர்கள் என்ற கேள்விக்கு ராதா பதில் சொல்ல முடியாமல் திணறினாராம்.

மேலும் வேறு யாருடனாவது உங்களுக்கு காதல் இருந்ததா என்றும் கேட்டுள்ளனர். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்ட பிறகு வருமானத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டதாகவும் தெரிகிறது.

இதனால் பெரும்பாலான கேள்விக்கு ராதா பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டே இருந்ததாக காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் தயாரிப்பாளர் பைசூல், ராதா தன்னைப்போலவே பலருடன் குடும்பம் நடத்தினார் என்றும் அதற்கான ஆதாரங்களையும் திரட்டி விரைவில் கமிஷனரை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.