இராணுவ வீரரின் கண்முன்னே மனைவி, மகளுக்கு நடந்த சோகம்!!

275

தேனியில் ராணுவ வீரரின் கண்முன்னர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக விபத்தில் பலியாகியிருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (54). இவருடைய மனைவி ஜூலியட்மெர்சி ஞானகுமாரி (44), மதுரையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு ஜனட்ஸ்வீட்டி பிரின்சஸ் (13), தெஸ்கிமரியம் (10) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்றைக்கு முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஏசுதாஸ் தன்னுடைய குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

தேனி தேசிய நெடுஞ்சாலையில் பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே கிடந்த மணலில் இருசக்கர வாகனம் ஏறி நிலை தடுமாறியுள்ளது. இதில் ஏசுதாஸ், அவருடைய இளைய மகள் சாலையில் இடது பக்கத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

அதேசமயம் அவருடைய மனைவியும், மகள் ஜனட்ஸ்வீட்டி பிரின்சஸ் வலது புறம் தூக்கி வீசப்பட்டனர். அப்போது வேகமாக வந்த லொறி ஒன்று சாலையில் விழுந்து கிடந்த மனைவி, மகள் மீது ஏறி சென்றது. இதில் இருவரும் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, லொறியை ஒட்டி வந்த சேவுகம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (48) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.