9 வயது சிறுவனை கழுத்தறுத்து கொன்ற சொந்த சகோதரன் : அதிர்ச்சி காரணம்!!

285

இந்தியாவின் ஒடீஷா மாநிலத்தில் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயது சிறுவன் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ஒடீஷாவின் போலங்கிர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள நதிக்கரை ஒன்றில் இருந்து சிறுவனின் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அது மாயமானதாக பெற்றோரால் புகார் அளிக்கப்பட்ட 9 வயது கான்ஷியாம் ராணா என்ற சிறுவனின் தலை என தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசார் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை விசாரித்துள்ளனர். இதில் சிறுவனின் சகோதரன் சம்பாபன் ராணா அளித்த மொழ்யில் பொலிசாருக்கு சந்தேகம் எழவே, அவரை கைது செய்த பொலிசார் அவருடன், அவரது மாமாவையும் கைது செய்து விசாரித்துள்ளனர்.

இருவரும் மந்திரவாதத்தில் நாட்டம் கொண்டவர்கள் எனவும், இதனால் துர்க்கா தேவிக்கு பலியிடும் நோக்கில் சிறுவனை கடத்திச் சென்றதாகவும்,

பூஜை அன்று சிறுவனை கழுத்தை துண்டித்து பலியிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சிறுவன் மாயமானதாக தெரியவந்த 3 நாட்களுக்கு பின்னரே பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தலையில்லாத சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர். தலையை முட்புதர் ஒன்றில் இருந்தும் கைப்பற்றியுள்ளனர். தற்போது கைதான இருவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.