தங்கச் சங்கிலி கொடுத்தால் தாலி கட்டுவேன் என கூறிய மாப்பிள்ளை : மொட்டை அடித்த மணமகள் வீட்டார்!!

363

லக்னோவில் வரதட்சணை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என கூறி திருமண மண்டபத்தை விட்டு எழுந்து சென்ற மாப்பிள்ளைக்கு மணமகள் குடும்பத்தார் மொட்டை அடித்துள்ளனர்.

குர்ரம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே, மணமகன் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

திருமணத்தன்று மணமகனுக்கு பல்சர் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், தனக்கு அப்பாச்சி பைக்தான் வேண்டும் என மணமகன் கேட்டதாகத் தெரிகிறது. அதை மாற்றித் தருவதாக மணமகள் வீட்டில் உறுதியளித்த பின்னர், தனக்கு தங்கச் செயின் வேண்டும் எனப் புதிதாக ஒன்றை மணமகன் தரப்பில் கேட்டதாகத் தெரிகிறது.

இதனால், மணமகள் வீட்டார் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். வரதட்சணையாகக் கேட்டவற்றை வழங்காவிட்டால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக் கூறி மணமகன் வீட்டார், மண்டபத்தை விட்டு வெளியேற முயன்றிருக்கின்றனர்

அவர்களை தடுத்த மணமகள் வீட்டார், மணமகன், அவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு மொட்டை அடித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.