சிறுமியை நிர்வாணமாக கட்டி வைத்து சித்திரவதை செய்த 5 பேர்!!

394

தஞ்சாவூரில் சிறுமியை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து அடித்து, உடலில் சூடு போட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 16 வயது மகளுக்கு, மணல் ஏற்றும் வேலை செய்துவந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுவன் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து அடிக்கடி, சிறுமியை வந்து சந்தித்துள்ளான். இதனை ஒருமுறை பார்த்த கோபாலகிருஷ்ணன், சிறுமியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட சிறுமியின் நடத்தை வெளியில் தெரிந்துவிட்டது.

இதனை அவமானமாக கருதிய சிறுமியின் தாய் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அம்மாவிடம் பேச ஆசைப்பட்ட சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு மகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களிலே அவருடைய செல்போனும் காணாமல் போயுள்ளது. அதனை சிறுமி தான் திருடியிருப்பார் என கருதிய அவர், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களுடன் சிறுமியை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து உடலில் சூடு வைத்துள்ளனர்.

அவர்கள் சென்றதும், கட்டுகளை அவிழ்த்து தப்பிய சிறுமி, வாழைத் தோட்டத்திற்கு வந்த ஒருவரிடம், நடந்தவை பற்றி தந்தையிடம் தெரிவிக்குமாறு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த தந்தை காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு விரைந்த பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், 6 மாதமாக 16 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், கோபாலகிருஷ்ணன்(29), மகேந்திரன்(35), சிவக்குமார்(31), வித்யா(27), மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.