கடவுள் அழைப்பதால் உயிரை விடுகிறேன் : தீயில் கருகி இறந்த பெண் மருத்துவரின் உருக்கமான கடிதம்!!

340

இந்தியாவில் பெண் மருத்துவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் நகரை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மனைவி பொங்கரலா வீணா (38). வீணா அங்குள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறைக்கு சென்ற வீணா தன்னிடம் இருந்த பெட்ரோலை மேலே ஊற்றி கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் தீயில் முழுவதுமாக கருகி வீணா உயிரிழந்தார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் வீணா சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டதும் தெரியவந்தது.

இதனிடையில் வீணா இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில், என் கணவர் மற்றும் குழந்தைகளை நான் நேசிக்கிறேன். இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். கடவுள் என்னை அழைப்பதால் உயிரை விடுகிறேன் என எழுதியுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.