கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் மனைவியை சுட்ட கணவனின் அதிர்ச்சி செயல்!!

349

மனைவியின் கற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் கையை சுட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் நம்பிக்கையில்லை எனக் கூறி அவரது கணவர் வீட்டார் பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த மந்திரவாதி எரியும் நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை என அர்த்தம் எனவும் கூறியுள்ளார்.

முதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துள்ளார். அவரது மனைவி கைவைத்தபோது, கையை நெருப்பிலிருந்து அகற்றாமல் கணவர் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார்.

கற்பை நிரூபிக்க நெருப்பில் நீண்ட நேரம் வலுக்கட்டாயமாக கையை வைத்திருந்த பெண்ணின் கைது வெந்து போனது. இதுகுறித்த படம் வைரலானதை அடுத்து பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.