வவுனியாவில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதை கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

965

வவுனியாவில் இன்று காலை பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள கொப்பேக்கடுவ நினைவுச்சிலையருகில் நேற்று மாலை கொழும்பில் பிரதமராக பதிவியேற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக பட்டாசு கொழுத்தி அவரின் ஆதரவாளர்களினால் வெற்றிக்கொண்டாட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கொப்பேகடுவ நினைவுச் சிலையருகில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்ன தலைமையில் மஹிந்த ராஜபச்சவின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கொப்பேகடுவ சிலைக்கு தேசியக்கொடி அணிவித்து, மலர் மாலை அணிவித்து பட்டாசுகள் கொழுத்தி ஆர்ப்பரிப்பு செய்தனர். இதன்போது கலந்துகொண்டவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தி கோஷமிட்டனர்.