நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். அந்த வகையில் நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனோ கனேசன், சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





