ரசிகர் மன்றம் வேண்டாம் : நடிகர் விஜய்சேதுபதி!!

274

sethupathiதென்மேற்கு பருவகாற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்சேதுபதி. தற்போது பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு, மெல்லிசை, இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி சொல்கிறார், எனக்கு ரசிகர் மன்றம் வைக்க பலர் அனுமதி கேட்டனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வேண்டாம் என்று மறுத்து விட்டேன். நடிப்பது மட்டுமே என் வேலை. படம் நன்றாக இருந்தால் போதும். கதைதான் ஹீரோ. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

பண்ணையாரும், பத்மினியும் படத்தின் கதை ரொம்ப பிடித்தது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்றார்.