பழனி கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா!!

288

Nayanதிண்டுக்கல் அடுத்த பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கோம்பைபட்டியில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இது கதிர்வேலன் காதல் என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின், கதாநாயகிகளாக நயன்தாரா, சாயாசிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரபாகரன் இயக்குகிறார்.

நேற்று இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு குழுவினருடன் நடிகை நயன்தாரா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு ரோப்கார் மூலம் வந்தனர். பின்னர் அவர்கள் மலைக்கோவிலில் உள்ள ராஜஅலங்காரத்தில் இருந்த முருகபெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

உதயநிதி ஸ்டாலினை புகைப்படம் எடுப்பதற்கு அவருடன் வந்த உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நடிகை நயன்தாரா வந்திருப்பது குறித்து அறிந்த பக்தர்கள் அவரை பார்ப்பதற்காக திரண்டு வந்தனர்.

இதை பார்த்த நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த அவர்கள் காரில் தனியார் ஹோட்டலுக்கு புறப்பட்டனர்.