அலரிமாளிகைக்குள் பதட்டம்!!

555

மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தினர் என்று கூறிய இரண்டு பேர் இன்று அலரி மாளிகைக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இருக்கின்ற சில உபகரணங்களை சோதனை செய்து அவற்றை அப்புறப்படுத்த முற்பட்ட போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அலரி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இருவரினதும் அடையாம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

-தமிழ்வின்-