நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!

546

எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை 16 ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிடவுள்ளார்.