யாழில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!!

854

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்..

யாழ். பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்த சாரதி அனுமதி பத்திரத்தை வைத்தே பொலிஸார் விபத்துக்குள்ளான நபரின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.