வவுனியாவில் மழைக்காலத்தில் வீதிகள் புனரமைப்பு : மாணவர்கள் அவதி!!

574

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் செல்லும் பிரதான வீதி தற்போதைய மழைகாலத்தில் புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருவதால் பாடசாலை மாணவர்களுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைச்சீருடைகளும் பழுதடையும் நிலையும் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து நாகர்இலுப்பைக்குளம் செல்லும் பிரதான வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் தற்போது மழையுடனான கால நிலையில் புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இதனால் அவ்வீதியூடாக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றதுடன் மாணவர்கள் இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாடசாலைச்சீருடைகள் பழுதடையும் நிலை காணப்படுகின்றதுடன் மழைகாலத்தில் சீருடைகள் மேலும் வீதிக்கு போடப்பட்டுள்ள கிரவல் மண்ணினால் பயன்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்றதுடன் அவ்வீதியால் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் தெற்குப்பிரதேச சபையினரின் பூரண கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள பகுதியில் வீதி அபிவிருத்தித்திணைக்களத்தின் புனரமைப்புப்பணியினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.