வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சினர் ஆர்ப்பாட்டம்!!

695

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (04.11) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தினசரி சந்தைக்கு முன்பாக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.கருணாதாச தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனவாத அரசு எமக்கு வேண்டாம், மக்களின் வரி எம்.பி.க்களை விலைக்கு வாங்கவா? ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் வேண்டாம், விவசாயி மகன் ஜனாதிபதி ஆனார் அன்று.. துரோகியானார் இன்று போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தலைவர் எஸ்.குமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.லரிப் மற்றும் எம்.எஸ்.அப்துல்பாரி, ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.