நாடாளுமன்றத்தில் தற்போது வரை எனக்கே பெரும்பான்மை : ரணில் சூளுரை!!

388

நாடாளுமன்றத்தில் தற்போதும் தன்னிடமே பெரும்பான்மை உள்ளதாக பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அல்ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வியின் போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இல்லை. அதன் காரணமாகவே நாடாளுமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை என அவர் தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டும் வரை தான் அலரி மாளிகையை விட்டு வெளியேறப் போவதில்லை உறுதிபட ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.