வரவு செலவுத் திட்டத்ததை சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருவதால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தாமதமாகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அல்ஜெஸீரா ஊடகத்துடன் இடம்பெற்ற செவ்வியின் போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையிலும் நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மை கிடைத்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பிற்கு உட்பட்டே தனக்கான பிரதமர் நியமனம் வழங்கப்பட்டது. தான் தொடர்ந்து பிரதமராக செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.





