வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடு!!

309

இலங்கை தமிழரசுக் கட்சியின் வழிகாட்டலில் இன்று(04.11) காலை 9.30 மணியளவில் நகரசபை பழைய மண்டபத்தில் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

இளைஞர்களின் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான விஷேட வழிகாட்டல் ஒளிரும் வாழ்வும் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ்.சிவமோகன்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சஜந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர்கள், யுவதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.