189 பேருடன் கடலில் மூழ்கிய விமானம் : என் தந்தை உயிருடன் வருவார் என காத்திருக்கும் 13 வயது சிறுமி!!

581

இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய தனது தந்தை நீச்சலடித்து உயிருடன் வருவார் என 13 வயது மகள் காத்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்கு நோக்கி கடந்த திங்களன்று கிளம்பிய விமானம் கடலில் வீழ்ந்தது. இதுவரை 67 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பவுல் அயோர்பாபா (43) என்ற நபரும் பயணித்தார்.

இந்நிலையில் பவுல் குறித்து அவரின் மகளான பினண்டா நயிஷிபா (13) உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், முதல் தடவையாக என் தந்தை பங்கல் பினாங்குக்கு பணி விடயமாக சென்றார்.

என் தந்தைக்கு நீச்சல் நன்றாக தெரியும், அவர் எப்படியாவது நீந்தி உயிர் பிழைத்திருப்பார் என நம்புகிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன் என என்னிடம் கூறிய வாக்குறிதியை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என நம்புகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.