வவுனியா மாவட்ட செலயகத்தில் கடற்படையின் சேவை நிலையம்!!

237


வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் இலங்கை கடற்படையின் சேவை நிலையம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. இவ்வியடம் குறித்து தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட தகவல் அதிகாரியுமான ரி.திரேஸ்குமார் இவ்வாறு தகவல் வழங்கியுள்ளார்.

வவுனியா மாவட்ட செலயகத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி ஏறக்குறைய 1.6 மில்லியம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இலங்கை கடற்படையின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றதுடன் கடற்படையைச் சேர்ந்த ய.விஜேரத்ன என்பவரால் பாராமரிக்கப்பட்டு வருகின்றது.



குறித்த அலுவலகர் விடுமுறையில் சென்றால் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என்று வழங்கப்பட்ட தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.