நண்பனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய மாணவனுக்கு நேர்ந்த கதி!!

942

நண்பனின் பிறந்த நாள் விழாவிற்குச் சென்று நீரில் மூழ்கி பாடசலை மணவன் ஒருவர் நேற்று மலை உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டி, பன்னல- அலபடகம பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சானுக ஜயசிங்க என்ற பாடசலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது பாடசாலை நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்தவற்காக குளியாப்பிட்டிய வல்பிடிகாம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹொட்டலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த நீச்சல் குளத்தில் குறித்த மாணவன் ஏனைய மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் அவர்கள் அதே இடத்தில் உள்ள சேற்று ஏரியில் குளிக்க போயிருந்ததாக தெரியவந்துள்ளது. அங்கு குறித்த மாணவன் சேற்றில் விழுந்து மூழ்கியுள்ளார்.

பின்னர் நண்பர்கள் ஹொட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்ததையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய மாணவனை தேடி கண்டு பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த மாணவரின் உடல் குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.