நாடாளுமன்றத்தில் வன்முறை நடந்தால் எதிர்கொள்ள தயார் : ஐ.தே.க. சவால்!!

498

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வன்முறையான நிலைமை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ள அவர், வன்முறை அதிகாரத்தை எதிர்கொள்ள தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை அபேகமவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்றத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டால், நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கொடூரமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-