வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயது முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

615

வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயதுடைய முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (11.11.2018) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் வல்லிபுரம் தங்கவடிவேல் வயது 82 என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.