உலக முடிவை தேடிச் சென்ற ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் அங்கிருந்து கீழே விழுந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது நண்பர்களுடன் நுவரெலியாவிலுள்ள உலக முடிவை பார்க்க சென்ற ஜேர்மன் பெண் புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.





