பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக 56 தாய்மார் படுகொலை!!

407

MURDERபாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 2012 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் வரை 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சில் 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், பாலியல் பலாத்கார வழக்கில் 344 வழக்குகளும் மற்ற வன்முறை சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.