வவுனியாவில் வாள்வெட்டுச் சம்பவம் : ஒருவர் வைத்தியசாலையில்!!

659

வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (11.11.2018) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மன்னார் வீதி பட்டக்காடு பகுதியில் இருவருக்குக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இவ் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.