சீரற்ற காலநிலையால் வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளனர்.
இன்று அதிகாலையில் இருந்து காலை 8 மணிவரை வவுனியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது. காலையில் இவ் வீதி வழியாக பயணங்களை மேற்கொண்ட வாகனங்களின் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து காணப்பட்டது.
இதேவேளை இன்று மாலை வவுனியாவில் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.








