கொழும்பு உயர் நீதிமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : வரவுள்ள மிக முக்கிய செய்தி?

567

நாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பாக வழக்கு விசாரணைகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் வளாகத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பெருந்திரளானோர் திரண்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாளை அல்லது பிறிதொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

எப்படியாயினும் இன்னும் சற்று நேரத்தில்தான் முடிவை அறியமுடியும்.