சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதிகாலையில் இருந்து காலை 8 மணிவரை வவுனியாவில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதுடன் குளிரான காலநிலையும் நிலவுகின்றது.
வவுனியாவில் கடும் மழை பெய்து வந்த நிலையில் தற்போது கடந்த மூன்று தினங்களாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்தது. பனிமூட்டத்தால் காலையில் இவ் வீதி வழியாக பயணங்களை மேற்கொண்ட வாகனங்களின் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.






