ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்!!

268

கொழும்பு, சொய்சா மகளிர் வைத்தியசாலையில் பெண்ணொருவர் அதிஷ்டவசமாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் அழகிய 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளையும் இவர் பிரசவித்துள்ளார்.

சொய்சா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் டாக்டர் ருவன் பாத்திரனவின் ஆலோசனைக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின் குறித்த பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசேட மருத்துவ குழுவின் ஆலோசனைகளுக்கு இனங்க 4 குழந்தைகளும் சத்திர சிகிச்சையின் மூலம் பெற்றெடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் பெற்றோர்கள் இலங்கை விமானப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.

கோப்ரல் அயேசா தில்ஹானி மற்றும் கோப்ரல் தாரின் லக்மால் ஆகிய தம்பதியினரே இந்த குழந்தைகளின் பெற்றோர்களாவர்.