வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!!(படத்தொகுப்பு)

1826

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி திகழ்கின்றது.

இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (13.11.2018) வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரன்போர் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியாவில் கந்தசாமி கோவில், தாண்டிக்குளம் முருகன் கோவில், கோவில்குளம் சிவன்கோவில், சிதம்பரபுரம் பழனி முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் கோவில், நெடுங்கேணி முருகன் கோவில் என்பவற்றில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.



பல வடிங்கள் எடுத்து வந்த சூரபத்மனை பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் முருகப்பெருமான் சங்காரம் செய்தார்.

வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற சூரன் போரில் முழுமையான படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.