200 வருட நீதித்துறைக்கு கிடைத்த பாரிய வெற்றி இது : எம்.ஏ.சுமந்திரன்!!

365

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான வெற்றி என்று எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.