பரபரப்படையும் கொழும்பு : சபாநாயகர் மேற்கொண்டுள்ள அவசர நடவடிக்கை!!

329

அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நாளை காலை நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று மாலை இடைக்கால தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8.30 மணியளவில் அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார.