தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னரை் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.






