மைத்திரியின் அவசர உத்தரவு : முப்படைகள் தயார் நிலையில்!!

478

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று இரவு ஜனாதிபதி மைத்திரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இன்று இரவு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் விசேட பாதுகாப்பு கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதன்போது, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.