சுருதிஹாசனுக்காக கவலைப்பட்டேன் : நடிகை சரிகா!!

264

Sruthiமும்பை வீட்டில் நடிகை சுருதிஹாசன் தாக்கப்பட்டது அவரது தாய் சரிகாவை கவலைப்பட வைத்துள்ளது. சுருதிஹாசன் அந்த வீட்டில் தனியாக வசித்தார். மர்ம நபர் கதவை தட்டியதும் திறந்தார். அப்போது இந்த தாக்குதல் நடந்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சியானார்கள். சுருதியை தாக்கியவன் கைதாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சரிகா கூறியதாவது..

சுருதிஹாசன் மீது தாக்குதல் நடந்ததை அறிந்து கவலைப்பட்டேன். சுருதி இப்போது நன்றாக இருக்கிறார். எது நடக்ககூடாதோ அது எதிர்பாராமல் நடந்துள்ளது. இது மாதிரியான நிலைமைகளை எப்படி சமாளிப்பது என்று இதில் இருந்து நாம் கற்றுக் கொண்டு உள்ளோம்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நேர்கின்றன. தாக்குதல் காரணமாக சுருதிஹாசன் இனிமேல் என்னுடன் வந்து தங்கி இருப்பாரா என்று கேட்கிறார்கள். சுருதி என்னுடன் தங்க மாட்டார்.

சுருதிக்கு அவரது தொழில் முக்கியம். படப்பிடிப்புக்காக வெளிளூர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. பிள்ளைகள் வளர்ந்ததும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்களிடம் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தலாம். ஆனால் நச்சரிக்ககூடாது என்று சரிகா கூறினார்.