பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு : சபாநாயகர் திடீர் அறிவிப்பு!!

476

பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று காலை கூடிய நாடாளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

சபை கூட்டப்படுவதற்கு முன் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை ஜே.வி.பி கொண்டு வந்திருந்தது.

இதையடுத்து இன்று நாடாளுமன்றில் என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்த நிலையில் நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் முற்பகல் 10.00 மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.