நாங்கள் சிறுபான்மை அரசாங்கமாக செயல்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சற்று முன்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்குமே பெரும்பான்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியிருந்தது.
எனினும் நாளை காலை பத்து மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.







