கழுதைகள் மீது பாசம் காட்டும் திரிஷா!!

299

Trishaநடிகை திரிஷா விலங்குகள் மீது தனி பாசம் வைத்திருப்பது எல்லோரும் அறிந்ததே. நாய்கள் மீது பாசம் வைத்து வீதியோர நாய்களை தத்து எடுத்து அவற்றை பாதுகாத்து வந்தார்.

இதற்காக தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலாவின் விலங்குகள் நலம் காக்கும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு நாய்களுக்கு தொந்தரவு கொடுப்பதை குறைக்க வலியுறுத்தி குரலும் கொடுத்தார். இதன்விளைவாக கேட்பாரற்று ரோட்டில் திரியும் பல தெருநாய்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நாய் மீது பாசம் காட்டிய திரிஷா தற்போது கழுதைகள் மீது பாசம் காட்ட தொடங்கியிருக்கிறார். நாய்களுக்கென்று நாய்கள் தினம் கொண்டாடும் திரிஷா கழுதைகள் தினம் என்ற தலைப்பில் கழுதைகளுக்கு உணவு தருவதுபோன்ற படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பொது சேவைகளிலும் ஈடுபட்டு வரும் திரிஷாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். திரிஷா தற்போது தமிழில் என்றென்றும் புன்னகை, பூலோகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்